எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸில் ரூ.1,322 கோடி கடன் மோசடி: ஜீ குழும நிறுவனர் சுபாஷ் மீது வழக்கு

ஜீ குழு​மத்​தின் நிறு​வனர் சுபாஷ் சந்​திரா

ஜீ குழு​மத்​தின் நிறு​வனர் சுபாஷ் சந்​திரா

Updated on
1 min read

புதுடெல்லி: ஜீ குழு​மத்​தின் நிறு​வனர் சுபாஷ் சந்​திரா பெரும் கடன் பிரச்​சினை​யில் சிக்​கி​யுள்​ளார். ஜீ குழு​மம் சார்​பில் வாங்​கப்​பட்ட ரூ.22,000 கோடி கடன் நிலு​வை​யில் இருக்​கும் நிலை​யில், தான் திவால் அடைந்​து​விட்​ட​தாக அறி​வித்​து, கடன் உத்​தர​வாதங்​களுக்கு ரூ.6.25 கோடி செலுத்த அவர் முன் வந்​தார்.

அதை தேசிய கம்​பெனிகள் சட்ட தீர்ப்​பா​யம் ஏற்​றுக் கொண்​டது. இதற்கு வங்​கி​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்தை அடுத்​து, தீர்ப்​பா​யம் தனது உத்​தரவை நிறுத்தி வைத்​தது.

இந்​நிலை​யில், ஜீ குழும நிறு​வனங்​களுக்​கு, எல்​ஐசி ஹவுசிங் பைனான்ஸ் (LICHFL) நிறு​வனத்​திட​மிருந்து ரூ.1,322 கோடி கடன் பெறு​வதற்​காக போலி சொத்து மதிப்பு சான்​றிதழ்​களை வழங்​கிய​தாகக் கூறப்​படும் வழக்​கில், சுபாஷ் சந்​திரா மற்​றும் சில தனி நபர்​கள் மீது சிபிஐ வழக்​குப் பதிவு செய்​துள்​ளது.

அவரை தவிர, ஜீ குழு​மத்​தின் வசந்த் சாகர் பிராப்​பர்​டீஸ், அதன் இயக்​குநர் பங்​கஜ் சுரோலி​யா உள்​ளிட்​டோர் மீதும் வழக்​குப்​ பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>ஜீ குழு​மத்​தின் நிறு​வனர் சுபாஷ் சந்​திரா</p></div>
இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற 11 பேர் நடுக்கடலில் தஞ்சம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in