இந்தியா - ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்து

சென்னை - விளாடிவோஸ்டாக் கடல் வழித்தடம்
இந்தியா - ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்து
Updated on
2 min read

புதுடெல்லி: பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புதின் டெல்​லி​யில் நேற்று சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது பொருளா​தா​ரம், மனித வளம், உரம், கப்​பல் கட்​டு​மானம் தொடர்​பாக 16 முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

இந்​திய, ரஷ்ய வரு​டாந்​திர உச்சி மாநாட்​டில் பங்​கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று முன்​தினம் இரவு டெல்லி வந்​தார். அன்​றிரவு ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி சிறப்பு விருந்து அளித்​தார். அப்​போது ரஷ்ய மொழி​யில் எழுதப்​பட்ட பகவத் கீதையை புதினுக்கு அவர் பரி​சாக வழங்​கி​னார்.

இதைத் தொடர்ந்து குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் புதினுக்கு நேற்று காலை 21 குண்​டு​கள் முழங்க ராணுவ மரி​யாதை​யுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பிரதமர் மோடி அவரை வரவேற்​றனர். இதன்​பிறகு அதிபர் விளாடிமிர் புதின், காந்தி நினை​விடத்​துக்கு சென்று அஞ்​சலி செலுத்​தி​னார்.

பின்​னர் டெல்​லி​யில் உள்ள ஹைத​ரா​பாத் இல்​லத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி​யும் அதிபர் விளாடிமிர் புதினும் அதி​காரப்​பூர்​வ​மாக பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது பிரதமர் மோடி கூறும்​போது, “உக்​ரைன் போர் விவ​காரத்​தில் இந்​தியா நடுநிலை​யுடன் செயல்​பட​வில்​லை. நாங்​கள் அமை​தி​யின் பக்​கம் நிற்​கிறோம். உக்​ரைன் போருக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கப்பட வேண்​டும்’’ என்று தெரி​வித்​தார்.

ரஷ்ய அதிபர் புதின் கூறும்​போது, “உக்​ரைன் போர் தொடர்​பாக அமெரிக்கா உள்​ளிட்ட நாடு​களு​டன் இணைந்து பணி​யாற்றி வரு​கிறோம். விரை​வில் அமைதி தீர்வு காணப்​படும்’’ என்று உறுதி அளித்​தார்.

இந்த பேச்​சு​வார்த்​தை​யின்​போது 16 முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. குறிப்​பாக, இந்​தியா - ரஷ்யா பொருளா​தார ஒத்​துழைப்பு திட்​டம் 2030 தொடர்​பான ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி இரு நாடு​களும் இணைந்து கூட்டு தயாரிப்​பு​களில் ஈடுபட உள்​ளன.

அதன்​பிறகு இரு தலை​வர்​களும் கூட்​டாக நிருபர்​களுக்கு பேட்டி அளித்​தனர். அப்​போது பிரதமர் மோடி கூறிய​தாவது: கடந்த 80 ஆண்​டு​களாக இந்​திய - ரஷ்ய உறவு துருவ நட்​சத்​திரம் போன்று நிலை​யாக இருக்​கிறது. இரு நாடு​கள் இடையி​லான உறவு காலத்​தால் புட​மிடப்​பட்​டது.

வரும் 2030-ம் ஆண்டு வரையி​லான இந்​திய, ரஷ்ய பொருளா​தார திட்​டத்​துக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்டு உள்​ளது. யுரேசி​யன் பொருளா​தார கூட்​டமைப்​புக்​கும் இந்​தி​யா​வுக்​கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தத்தை மேற்​கொள்​வது தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு உள்​ளது. வேளாண்​மை, உரம், உணவு பாது​காப்பு உள்​ளிட்ட துறை​களில் இரு நாடு​களும் இணைந்து பணி​யாற்​றும். இந்​தி​யா​வும் ரஷ்​யா​வும் இணைந்து யூரி​யாவை உற்​பத்தி செய்​யும்.

சென்​னை- விளாடிவோஸ்​டாக் கடல் வழித்​தடம், ஐஎன்​எஸ்​டிசி வழித்​தடம், வடக்கு கடல் வழித்​தடம் ஆகிய திட்​டங்​கள் முன்​னெடுத்​துச் செல்​லப்​படும். துருவ பகு​தி​களில் கப்​பல்​களை இயக்க இந்​திய மாலுமிகளுக்கு ரஷ்யா சிறப்பு பயிற்சி அளிக்க உள்​ளது. இதன்​மூலம் ஆர்​டிக் பகு​தி​யில் இந்​தி​யா, ரஷ்யா இடையி​லான உறவு வலு​வடை​யும். இந்​திய இளைஞர்​களுக்கு புதிய வேலை​வாய்ப்​பு​கள் கிடைக்​கும்.

கப்​பல் கட்​டு​மானத்​தில் இந்​தி​யா​வும் ரஷ்​யா​வும் இணைந்து பணி​யாற்​றும். அணு சக்​தி, எரிசக்​தி, மரபு​சாரா எரிசக்​தி, அரிய​வகை தனிமங்​கள், தொழில்​நுட்​பம் ஆகிய​வற்​றில் இரு நாடு​கள் இடையி​லான ஒத்​துழைப்பு மேலும் அதி​கரிக்​கும். ரஷ்ய சுற்​றுலா பயணி​கள் மற்​றும் ரஷ்ய குழு​வினர் 30 நாட்​கள் விசா இல்​லாமல் இந்​தி​யா​வுக்கு வருகை தரும் திட்​டம் விரை​வில் அறி​முகம் செய்​யப்​படும். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

ரஷ்ய அதிபர் புதின் கூறிய​தாவது: இந்​தி​யா, ரஷ்யா இடையி​லான வர்த்​தகம் 96 சதவீதம் உள்​ளூர் கரன்​சிகளில் நடை​பெறுகிறது. இருதரப்பு வர்த்​தகம் கடந்த ஓராண்​டில் 12% அதி​கரித்​திருக்​கிறது. இந்த வர்த்​தகம் 100 பில்​லியன் டாலரை எட்​டும். இந்​தி​யா​வுக்​கான கச்சா எண்​ணெய், நிலக்​கரி ஏற்​றுமதி தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. இந்​தி​யா​வுக்கு தேவை​யான கச்சா எண்​ணெய் தடை​யின்றி தொடர்ந்து விநி​யோகம் செய்​யப்​படும்.

இந்​தி​யா​வுட​னான வர்த்தக உறவை மேம்​படுத்த வடக்கு தெற்கு போக்​கு​வரத்து வழித்​தடம் உரு​வாக்​கப்​படும். இதன்​மூலம் ரஷ்​யா, பெலாரஸ் நாடு​களில் இருந்து இந்​திய பெருங்​கடல் வழி​யாக இந்​தி​யா​வுடன் வர்த்​தகம் நடை​பெறும். பாது​காப்பு துறை தொடர்​பாக பல்​வேறு உடன்​பாடு​கள் எட்​டப்​பட்டு உள்​ளன. இது இரு​நாட்டு பாது​காப்பு உறவை புதிய உச்​சத்​துக்கு கொண்டு செல்​லும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

ரஷ்​யா​விடம் இருந்து கூடு​தலாக எஸ் 400 ஏவு​கணை​களை வாங்​க​வும் ரஷ்​யா​வின் எஸ் 500 ஏவு​கணை​களை இந்​தி​யா​வில் தயாரிக்​க​வும்​ உடன்​​பாடு எட்​டப்​பட்​டிருப்​ப​தாக தகவல்​கள்​ வெளி​யாகி உள்​ளன. மேலும்​ ரஷ்​யா​வின்​ ஐந்​​தாம்​ தலை​முறை போர்​ வி​மான​மான சுகோய்​ எஸ்​யு ரகத்​தை சேர்​ந்​த 54 போர்​ வி​மானங்​களை இந்​தி​யா​வில்​ த​யாரிப்​பது குறித்​தும்​ உடன்​​பாடு எட்​டப்​பட்​டிருப்​ப​தாக கூறப்​படு​கிறது.

சென்​னை- விளாடிவோஸ்​டாக் வழித்தடம்: இந்​தி​யா, ரஷ்யா இடையே ராணுவ தளவாட ஆதரவு பரி​மாற்ற ஒப்​பந்​தம் (ஆர்​இஎல்​ஓஎஸ்) கடந்த பிப்​ர​வரி​யில் கையெழுத்​தானது. இந்த ஒப்​பந்​தத்​துக்கு ரஷ்ய நாடாளு​மன்​றம் சில நாட்​களுக்கு முன்பு ஒப்​புதல் அளித்​தது.

இதன்​படி ரஷ்ய ராணுவ தளங்​கள் மற்​றும் இந்​திய ராணுவ தளங்​களை இரு நாடு​களும் பரஸ்​பரம் பயன்​படுத்​திக் கொள்​ளலாம். குறிப்​பாக ஆர்​டிக் மற்​றும் பசிபிக் பகு​தி​களில் அமைந்​துள்ள ரஷ்​யா​வின் 40 ராணுவ, கடற்​படை, விமானப் படைத் தளங்​களை இந்​தி​யா​ பயன்​படுத்த முடியும்.

ஆர்​இஎல்​ஓஎஸ் ஒப்​பந்​தத்​தின் ஒரு பகு​தி​யாக சென்​னை- விளாடிவோஸ்​டாக் கடல் வழித்​தடம் செயல்​படுத்​தப்பட உள்​ளது. தற்​போது ரஷ்​யா​வின் செயின்ட் பீட்​டர்​ஸ்​பர்க் நகரில் இருந்து மும்​பைக்கு சரக்கு கப்​பல்​கள் இயக்​கப்​படு​கின்​றன. இந்த வழித்​தடம் 16,000 கி.மீ. தொலைவு கொண்​டது. இத்​தடத்​தில் ரஷ்​யா​வில் இருந்து இந்​தி​யா​வுக்கு சரக்கு கப்​பல்​கள் வந்து சேர 40 நாட்​களாகிறது. இதற்கு பதிலாக சென்​னை-​விளாடிவோஸ்​டாக் கடல் வழித்​தடம் செயல்​படுத்​தப்​பட உள்​ளது. இந்​த தடத்​தில்​ 16 நாட்​களில்​ ரஷ்​யா​வில்​ இருந்​து சென்​னைக்​கு சரக்​கு கப்​பல்​கள்​ வந்​து சேரும்​. இத​னால்​ எரிபொருளும்​, நேரமும்​ சேமிக்​கப்​படும்​.

இந்தியா - ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்து
நூறாவது சதத்தை எட்டுவாரா விராட் கோலி? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in