

புதுடெல்லி: ஏற்றுமதியாளர்களுக்கு கடன் கிடைப்பதை மேம்படுத்தும் வகையில் ரூ.7,295 கோடி மதிப்பிலான ஏற்றுமதி தொகுப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதில், ரூ.5,181 கோடி வட்டி மானிய திட்டம் மற்றும் ரூ.2,114 கோடி பிணை ஆதரவு திட்டமும் அடங்கும். இந்த இரண்டு திட்டங்களும் ஆறு ஆண்டுகளில் (2025-31) செயல்படுத்தப்படும்.
மத்திய அரசின் இந்த ஏற்றுமதி தொகுப்பு நடவடிக்கைகள் ஏற்றுமதியாளர்களின் வர்த்தக நிதி சிக்கல்களை தீர்க்கும் என்று வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அஜய் படூ தெரிவித்துள்ளார்.