Published : 29 May 2023 06:24 PM
Last Updated : 29 May 2023 06:24 PM

சென்செக்ஸ்  344 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 344 புள்ளிகள் (0.55 சதவீதம்) உயர்வடைந்து 62,846 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி98 புள்ளிகள் (0.54 சதவீதம்) உயர்ந்து 18,598 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:41 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 440.78 புள்ளிகள் உயர்வடைந்து 62,942.47 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 110.70 புள்ளிகள் உயர்ந்து 18,610.05 ஆக இருந்தது.

கடன் உச்சவரம்பை உயர்த்துவதற்கான தற்காலிக ஒப்பந்தத்தை அமெரிக்கா எட்டியுள்ள நிலையில், உலகளாவிய சந்தைகளில் சாதகமான போக்கு நிலவியது. அதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் வாரத்தின் முதல்நாள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் நிறைவு செய்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 344.69 புள்ளிகள் உயர்வடைந்து 62,846.38 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 99.30 புள்ளிகள் உயர்ந்து 18,598.65 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், டைட்டன் கம்பெனி, டாடா ஸ்டீல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ், நெஸ்ட்லே இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், கோடாக் மகேந்திர பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. பவர் கிரிடு கார்பரேஷன், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், மாருதி சுசூகி, விப்ரோ, டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், டெக் மகேந்திரா , ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x