Published : 04 May 2023 06:00 AM
Last Updated : 04 May 2023 06:00 AM

தங்கம் பவுனுக்கு ரூ.728 உயர்வு - மீண்டும் ரூ.45 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.728 அதிகரித்து ரூ.45,648-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம், தங்கம் விலை மீண்டும் ரூ.45 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.42,760-க்கு விற்பனையானது. 26-ம் தேதி ரூ.43,040 ஆக அதிகரித்தது.

பின்னர், இந்த ஆண்டு ஜன.27-ம் தேதி முதல் 31-ம்தேதி வரை ஒரு பவுன் ரூ.42,700 முதல் ரூ.42,800 வரை விற்பனையாகி வந்தது. குறிப்பாக, பிப்.2-ம் தேதி ஒரு பவுன் ரூ.44,040-க்கு புதிய உச்சத்தை எட்டி விற்பனையானது. பின்னர், கடந்த 5-ம் தேதி விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து, பவுன் ரூ.45,520-க்கு விற்பனையாகி மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது. பின்னர், 10-ம் தேதி பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,800-க்கு விற்பனையானது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.91 அதிகரித்து ரூ.5,706-க்கும், பவுனுக்கு ரூ.728 அதிகரித்துரூ.45,648-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.49,256-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை உயர்வு குறித்து, நகை வியாபாரிகள் கூறும்போது, ‘‘சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி அதிகளவு தங்கத்தை வாங்கி இருப்பு வைத்து வருகிறது. இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை உயர்ந்து வருகிறது’’ என்றனர். வெள்ளி கிராம் ரூ.81.80-க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.81,800-க்கும் விற்பனையாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x