Published : 13 Sep 2017 09:41 AM
Last Updated : 13 Sep 2017 09:41 AM

எஸ்பிஐ லைஃப் ஐபிஓ வெளியிட செபி அனுமதி

எஸ்பிஐ லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் பொதுப்பங்கு வெளியிட (ஐபிஒ) செபி அனுமதி வழங்கி இருக்கிறது. இதன் மூலம் ரூ.7,000 கோடி நிதி திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்பிஐ லைப் கடந்த ஜூலை மாதம் செபியின் அனுமதிக்காக விண்ணப்பித்தது.

எஸ்பிஐ லைப் தவிர, ஹெச்டிஎப்சி ஸ்டாண்ர்ட் லைப், ஜிஐசி, நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட செபியின் அனுமதிக்காக காத்திருக்கின்றன. எஸ்பிஐ, பிஎன்பி பரிபா கார்டிப் எஸ்ஏ என்னும் இரு நிறுவனங்கள் எஸ்பிஐ லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் முக்கியமான முதலீட்டாளர்கள் ஆகும். எஸ்பிஐ வசம் 70.10% பங்குகளும், பிஎன்பி பரிபா கார்டிப் வசம் 26% பங்குகளும் உள்ளன. இதில் எஸ்பிஐ 8 கோடி பங்குகளையும், பிஎன்பி பரிபா கார்டிப் எஸ்ஏ 4 கோடி பங்குகளையும் விற்க இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x