Published : 22 Sep 2017 09:48 AM
Last Updated : 22 Sep 2017 09:48 AM
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தோல் பதனிடும் முறையால் ஏற்படும் மாசுபாடுகளைக் குறைப்பதற்கு மத்திய தோல் ஆய்வு மையம் (சிஎல்ஆர்ஐ) புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான தொழில்நுட்ப உரிமத்தை என்எஸ் எகோ சொல்யூஷன்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது.
இதுகுறித்து சிஎல்ஆர்ஐ இயக்குநர் பி.சந்திரசேகரன் கூறியதாவது: தற்போதுள்ள முறையில் உலர் தோல் பதனிடல் தொழில்நுட்பம் மிகவும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்த தொழில்நுட்பம் தோல் பதனிடல் துறைக்கு பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் சிறப்பான பலன்களை வழங் கும்’’ என்று தெரிவித்தார்.
``உலகிலேயே முதன்முறையாக இந்த தொழில்நுட்ப முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த செலவே ஆகும்.தோல் பதனிடும் துறை யில் அதிகமாக குரோமியம் பயன்படுத்தப்படுகிறது. குரோ மிய பயன்பாட்டை இந்த புதிய தொழில்நுட்பம் குறைக்கும்’’ என்று சிஎல்ஆர்ஐ தலைமை விஞ்ஞானி முரளிதரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT