Published : 27 Sep 2017 10:37 AM
Last Updated : 27 Sep 2017 10:37 AM

5ஜி சேவையை தொடங்கஉயர்நிலைக் குழு அமைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை நடைமுறைப் படுத்துவதற்காக மத்திய அரசு உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது. 2020-ம் ஆண்டுக்குள் 5 ஜி தொலைத் தொடர்பு சேவையை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான வழிமுறைகளை இந்த குழு வகுக்கும்.

இது தொடர்பாக தொலைத் தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா நேற்று கூறியதாவது: இந்தியாவில் 5 ஜி தொழில்நுட்பத்தை கொண்டுவருவதற்காக உயர்நிலைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 ஜி தொழில்நுட்பத்தை கொண்டுவருவதற்கான பணிகள், அதன் நோக்கங்கள் மற்றும் அதற்கான இலக்குகளை இந்த குழு மேற்கொள்ளும்.

2020-ம் ஆண்டுக்குள் உலக அளவில் 5ஜி சேவை நடைமுறைக்கு வந்துவிடும். அதே நேரத்தில் இந்தியாவிலும் 5ஜி சேவை செயல்பாட்டுக்கு வந்துவிடும் என நம்புவதாகவும் சின்ஹா கூறினார்.

5ஜி சேவையைத் தொடங்குவதற்கான பணிகள், அது தொடர் பான ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் மேம்பாட்டுக்காக ரூ.500 கோடியில் நிதியம் உருவாக்குவதற்கு அரசு திட்டமிட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள் ளனர்.

5ஜி தொழில்நுட்பத்தின் மூலம் நகர்ப்புறங்களில் ஒரு விநாடிக்கு 10,000 மெகாபைட் வேகத்திலும், கிராமப் புறங்களில் ஒரு விநாடிக்கு 1,000 மெகாபைட் வேகத்திலும் இணைய சேவையை வழங்க அரசு இலக்கு வைத்துள்ளது.

5ஜி தொழில்நுட்பத்துக்கான இந்த குழு அமைச்சகங்களின் செயலர்களை உள்ளடக்கியதாக இருக்கும். குறிப்பாக தொலைத் தொடர்பு செயலர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக செயலர்கள் இந்தக் குழுவில் இடம் பெறுவர். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x