Published : 17 Feb 2023 10:38 AM
Last Updated : 17 Feb 2023 10:38 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 124 புள்ளிகள் சரிவு

கோப்புப்படம்

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 250 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,933 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 50 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,974 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வார இறுதி நாள் வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கின. காலை 10:09 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 124.57 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,194.94 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 40.85 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,995.00ஆக இருந்தது.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகித உயர்வை நீண்ட காலத்திற்கு தொடரும் என்று வெளியான தகவலால் உண்டான அச்ச உணர்வு, உலகளாவிய சந்தைகளில் பாதகமான சூழலுக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடனேயத் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், எல் அண்ட் டி, ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், டைட்டன் கம்பெனி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பவர் கிரீடு கார்ப்பரேஷன், மாருதி சுசூகி, என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க், பாரதி ஏர் டெல் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஐடிசி, டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், எம் அண்ட் எம், ஹெச்டிஎஃப்சி, டெக் மகேந்திரா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ, இன்டஸ்இன்ட் பேங்க், நெஸ்ட்லே இந்தியா பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x