Published : 12 Dec 2016 09:48 AM
Last Updated : 12 Dec 2016 09:48 AM
பண மதிப்பு நீக்கம் காரணமாக ஜன் தன் வங்கி கணக்குகளில் டெபாசிட்கள் குவியத்தொடங்கி இருந்தாலும், இன்னும் 23 சதவீத ஜன் தன் கணக்குகளில் இருப்பு ஏதும் இல்லை என தெரிய வந்திருக்கிறது. பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு ஜன் தன் வங்கி கணக்குகளில் சுமார் ரூ.29,000 கோடி முதலீடு செய்யப்பட்டிருந்தாலும், 22.9 சதவீத வங்கி கணக்குகளில் பணம் ஏதும் இல்லை.
பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, ஆரம்ப நாட்களில் அதிக தொகை டெபாசிட் செய்யப்பட்டாலும், அடுத்தடுத்த வாரங்களில் டெபாசிட் தொகை குறைந்து கொண்டே வருகிறது. டிசம்பர் 7-ம் தேதி வரையில் ரூ.25.8 கோடி ஜன் தன் வங்கி கணக்குகளில் ரூ.74,609.50 கோடி இருக்கிறது. ஜன் தன் வங்கி கணக்கில் அதிகபட்சம் ரூ.50,000 வரை டெபாசிட் செய்யலாம். நவம்பர் 9-ம் தேதி வரை ஜன் தன் கணக்கில் 45,636.61 கோடி ரூபாய் மட்டுமே இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT