Published : 01 Jan 2023 04:19 AM
Last Updated : 01 Jan 2023 04:19 AM

ஒரு பவுன் தங்கம் விலை ரூ.41 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.120அதிகரித்து ரூ.41,040-க்கு விற்பனையானது. இதனால், தங்க நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வரு கிறது. கடந்த 28-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.40,840-க்கு விற்பனையானது. 30-ம்தேதி 40,920 ஆக அதிகரித்தது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.5,130-க்கும், பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.41,040-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.44,256-க்குவிற்பனையாகிறது.

வெள்ளி விலை: ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.74.30-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.74,300 ஆக உள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து, நகை வியாபாரிகள் கூறுகையில், ‘‘வெளிநாடுகளில் கரோனா மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. அத்துடன், உக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, உலகம் முழுவதும் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பாக கருதி முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதுவே தங்கம் விலை உயர்வுக்கு காரணம்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x