Published : 14 Dec 2022 05:47 PM
Last Updated : 14 Dec 2022 05:47 PM

சென்செக்ஸ் 145 புள்ளிகள் உயர்வு

கோப்புப்படம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் புதன்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 145 புள்ளிகள் (0.23 சதவீதம்) உயர்ந்து 62,678 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 52 புள்ளிகள் (0.28 சதவீதம்) உயர்வடைந்து 18,660 ஆக இருந்தது.

புதன்கிழமை காலை வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. காலை 09:29 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 249.53 புள்ளிகள் உயர்வுடன் 62,782.83 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 46.30 புள்ளிகள் உயர்வடைந்து 18,654.30 ஆக இருந்தது. அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பணவீக்கம் எதிர்பார்த்தை விட குறைவாகவே இருந்ததால் இந்திய பங்குச்சந்தைகள் இரண்டாவது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 144.61 புள்ளிகள் உயர்ந்து 62,677.91 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 52.30 புள்ளிகள் உயர்ந்து 18,660.30 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, விப்ரோ, எம் அண்ட் எம் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஐடிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x