Published : 22 Dec 2016 10:54 AM
Last Updated : 22 Dec 2016 10:54 AM
125 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 1% மக்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர். பொருளாதாரத்தில் 95 சதவீதம் பரிவர்த்தனைகள் பணத்தால் நடைபெறுவது நாட்டுக்கு ஏற்றதல்ல என்று நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
தேசிய பேரிடர் மீட்புப் படை நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமிதாப் காந்த் கூறியதாவது: இந்திய பொருளாதாரத்தில் 95 சதவீதம் பரிவர்த்தனைகள் பணத்தால் நடைபெறுவது ஏற்புடையதல்ல. இது இந்திய பொருளாதாரத்தை 2 டிரில்லியன் டாலரிலிருந்து 2030-ம் ஆண்டுக்குள் 10 டிரில்லியன் டாலராக உயர்த்துவதற்கு சாதகமாக இருக்காது.
மொத்தம் 125 கோடி மக்கள் தொகையில் 1 சதவீதம் பேர் மட்டுமே வருமான வரியை செலுத்துகின்றனர். இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமானோர் மொபைல் போன்கள் வைத்துள்ளனர். மேலும் 100 கோடிக்கு மேலானோர் ஆதார் எண் வைத்துள்ளனர். உலகின் முன்னணி பொருளாதாரத்தில் இந்திய பொருளாதாரத்தை கொண்டு வருவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். இதுவரை 26 கோடி ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 20 கோடி ரூபே கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவே பணமில்லா பரிவர்த்தனைக்கு ஏற்ற தருணம் என்று அமிதாப் காந்த் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT