Published : 17 Nov 2022 05:22 PM
Last Updated : 17 Nov 2022 05:22 PM

சென்செக்ஸ் 230 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே நிறைவடைந்தது. வர்த்தக நேரத்தின் முடிவில் சென்செக்ஸ் 230 புள்ளிகள் (0.37சதவீதம்) வீழ்ச்சியடைந்து 61,750 ஆக இருந்தது. அதேநேரத்தில்,தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 65 புள்ளிகள் (0.36 சதவீதம்) சரிந்து 18,343 ஆக இருந்தது.

பங்குச்சந்தையில் வியாழக்கிழமை காலை வர்த்தகம் வீழ்ச்சியுடன் தொடங்கியது. காலை 09:45 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 78.61 புள்ளிகள் சரிந்து 61,902.11 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் 29.35 புள்ளிகள் சரிந்து 18,380.30 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தையின் மந்தமான போக்கின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளின் வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே நிறைவடைந்தது. இன்றைய வர்த்த நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 230.12 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,750.60 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 65.75 புள்ளிகள் சரிந்து 18,343.90 ஆக இருந்தது

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட் டி, ஐசிஐசிஐ பேங்க், பவர் கிரீட் கார்ப்பரேசன், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. அதேநேரத்தில் டிசிஎஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, விப்ரோ, ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், கோடாக் மகேந்திரா, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x