Last Updated : 26 Nov, 2016 10:21 AM

 

Published : 26 Nov 2016 10:21 AM
Last Updated : 26 Nov 2016 10:21 AM

பண மதிப்பு நீக்கத்தின் பாதிப்பு இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது: பிட்ச் கணிப்பு

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்தியாவின் வளர்ச்சி குறைவாக இருந்தாலும், நடுத்தர காலத்தில் சீனாவை விட சிறப்பான வளர்ச்சி இருக்கும் என பிட்ச் கணித்திருக்கிறது.

சீர்திருத்த நடவடிக்கை, கட்டுமான முதலீடுகள், வட்டி விகித குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் 2018-ம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி வேகம் எடுக்கும் என்னும் கணிப்பு இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் சீனாவின் வளர்ச்சி பெரிதாக இருக்காது என பிட்ச் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்திய இயக்குநர் தாமஸ் ரூக்மாக்கர் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்திருப்பது:

பண மதிப்பு நீக்கப்பட்டிருப்ப தால் குறுகிய காலத்தில் பாதிப்பு இருக்கும். ஆனால் பண புழக்கத்தை எப்படி கையாளு கிறார்கள் என்பது முக்கியமானது. நடப்பு காலாண்டில் நிச்சயம் வளர்ச்சி பாதிப்படையும், ஆனால் ஒட்டுமொத்த நிதி ஆண்டில் பெரிய பாதிப்பு இருக்காது.

ஜிடிபி கணிப்பு

பண மதிப்பு நீக்கம் பல துறை களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், ஜிடிபியில் எந்தளவுக்கு பாதிப்பு இருக்கும் என்பதை கணிப்பது கடினமாக உள்ளது. ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வராத நோட்டுகள் மற்றும் சொத்துகளை வெளியிட்டுள்ளதன் காரணமாக இந்தியாவின் நிதி நிலைமை மேம்படும்.

தற்போதைய சூழ்நிலையில் பணப்புழக்கத்தை அதிகப்படுத்து வதன் மூலம் மோசமான விளைவு களைத் தடுக்க முடியும் என்று கூறினார்.

நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக இருக்கும் என கடந்த அக்டோபரில் பிட்ச் தெரிவித்திருந்தது. மேலும் வரும் 2018-19-ம் நிதி ஆண்டில்தான் எட்டு சதவீத வளர்ச்சி இருக்கும் என்றும் முன்னதாக கணித்திருந் தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x