Published : 14 Jun 2022 06:26 AM
Last Updated : 14 Jun 2022 06:26 AM
மும்பை: பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான நேற்று கடும் சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தை 1,457 புள்ளிகள் சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ், இன்டஸ் இந்த் வங்கி, டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ், என்டிபிசி, இன்ஃபோசிஸ், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டவற்றின் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன. மொத்தம் 2.68 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 52,846 புள்ளிகளாக நிலைபெற்றது.
தேசிய பங்குச் சந்தையில் 427 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 15,774 புள்ளிகளானது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக பதிவான நாட்டின் பணவீக்கம் மே மாதத்தில் 7.04% ஆக குறைந் துள்ளது.
ஆசிய பங்குச் சந்தையிலும், ஐரோப்பிய பங்குச் சந்தையிலும் கடுமையாக சரிவும், பங்குகளை விற்கும் போக்கும் காணப்பட்டது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எப்ஐஐ) அதிக அளவில் பங்குகளை விற்கும் போக்கு காணப்பட் டது. கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 3,973 கோடி மதிப்பிலான அளவிற்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர். டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு மேலும் 20 காசுகள் குறைந்தது. இதனால் ஒரு டாலரின் மதிப்பு ரூ. 78.13 என்ற அளவில் வர்த்தகமானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT