Published : 23 May 2016 09:47 AM
Last Updated : 23 May 2016 09:47 AM

ஹெச்டிஎப்சி வங்கி 500 கிளைகள் தொடங்க திட்டம்

தனியார் துறை வங்கியான ஹெச்டிஎப்சி நடப்பு நிதி ஆண்டில் 500 புதிய கிளைகளை தொடங்க முடிவு செய்திருக்கிறது.

தொடர்ந்து விரிவாக்கப்பணி களில் ஈடுபட்டு வரும் ஹெச்டிஎப்சி வங்கி நடப்பாண்டிலும் 500 கிளைகளை தொடங்க முடி வெடுத்திருப்பதாக தெரிகிறது. இதில் 60 சதவீத கிளைகள் சிறு நகரங்கள் மற்றும் கிராமப் பகுதியில் தொடங்கப்படும்.

கடந்த நிதி ஆண்டில் 506 கிளைகள் தொடங்கப்பட்டன. இதில் 256 கிளைகள் சிறு நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் தொடங் கப்பட்டன. கடந்த மார்ச் 2016 நிலவரப்படி 4,520 கிளைகள் உள்ளன.

தவிர 50,000 கோடி ரூபாயை கடன் பத்திரங்கள் மூலம் திரட்ட இந்த வங்கி திட்டமிட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x