Published : 10 Apr 2022 05:37 AM
Last Updated : 10 Apr 2022 05:37 AM

வருமான வரி ரீபண்ட் ரூ.2.24 லட்சம் கோடி

புதுடெல்லி: கடந்த நிதி ஆண்டில் (2021-22) 2.43 கோடி பேருக்கு வருமான வரி ரீபண்டாக ரூ.2.24 லட்சம் கோடி திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ரீபண்ட் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 5.7 கோடியாகும். இவற்றில் 22.4 % விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்ட தினத்திலேயே பரிசீலிக்கப்பட்டு ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளன. 1.47 கோடி விண்ணப்பங்கள் ஒருவார காலத்துக்குள் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. ஒரு மாதத்தில் 70 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டதாக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய நிதி ஆண்டில் 2.37 கோடி பேருக்கு ரூ.2.39 லட்சம் கோடி ரீபண்ட் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x