Published : 06 Apr 2016 10:29 AM
Last Updated : 06 Apr 2016 10:29 AM
சர்வதேச பொருளாதார மந்த நிலை மற்றும் ஆர்பிஐ ரெபோ வட்டி விகித குறைப்பு நடவடிக் கைகள் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 2 சதவீதம் சரிந்து 24883 புள்ளிகளில் முடிந்தது. நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 516 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. தேசியப் பங்குச் சந்தையின் குறியீடான நிப்டி 155 புள்ளிகள் சரிந்து 7603 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்துள்ளது.
பங்குச் சந்தை சரிவுக்கு ரிசர்வ் வங்கியின் ரெபோ வட்டி விகித குறைப்பு நடவடிக்கை முக்கிய காரணம் என்று சந்தை வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஏற்கெனவே மத்திய அரசு சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. தற்போது ரெபோ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதன் காரணமாக வங்கித் துறை குறைவான வட்டி விகிதத்திலேயே இயங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
நேற்றைய வர்த்தக சரிவில் ஆட்டோமொபைல் மற்றும் வங்கித்துறை பங்குகள் முக்கிய பங்கு வகித்தன. மும்பை பங்குச் சந்தையின் நுகர்வோர் பொருட்கள் துறை குறியீடு தவிர அனைத்து துறை குறியீடுகளும் சரிவில் வர்த்தகம் முடிந்தன. ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ பங்குகளின் சரிவு 5 சதவீதத்துக்கும் மேல் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT