Published : 03 Apr 2016 11:58 AM
Last Updated : 03 Apr 2016 11:58 AM
ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக எம்.கே.சுரானா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். முன்பு தலைவராக இருந்த நிஷி வாசுதேவாவின் பதவிக் காலம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து புதிய தலைவராக சுரானாவை மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது.
முன்னாதாக ஹெச்பிசில் நிறுவனத்தின் துணை நிறுவனமான பிரைஸ் பெட்ரோலியம் கம்பெனியின் தலைமை செயல் அதிகாரியாக செப்டம்பர் 2012 முதல் இருந்தார். மெக்கானிகல் இன்ஜினீயரிங் மற்றும் நிதி மேலாண்மையில் முதுகலை படிப்பு முடித்தவர்.
எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் 33 வருட அனுபவம் மிக்கவர். பல முக்கியமான பொறுப்புகளில் இவர் இருந்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT