Published : 31 Dec 2021 02:04 PM
Last Updated : 31 Dec 2021 02:04 PM

பிரபல ஜவுளி நிறுவனம் ரூ.65.61 கோடி வரி ஏய்ப்பு: வணிகவரித் துறை நடவடிக்கை

சென்னை

சென்னையை சேர்ந்த பிரபல ஜவுளி நிறுவனம் ரூ.65.61 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டு, வணிகவரித் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வணிகவரி ஆணையரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் சென்னையை சேர்ந்த பிரபல ஜவுளி வியாபார குழுமத்தின் சென்னை,கோவை மற்றும் சேலத்தில் உள்ள 7 இடங்களில் வணிகவரித் துறையினரால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, 2017-18 முதல் 2021-22 வரையிலான காலத்துக்கு செலுத்தப்பட வேண்டிய வரித் தொகை ரூ.10.62 கோடி, அனுமதிக்கப்படாத உள்ளீட்டு வரி வரவை எடுத்துக்கொண்டது ரூ.21.90 கோடி, இருப்பு விவர வித்தியாசம் ரூ.5.90 கோடி, முறையற்ற வரிவிலக்கு கோரிய வகையில் ரூ.22.96 கோடி மற்றும் இதர ஏய்ப்பு வகையில் ரூ.4.23 கோடி என மொத்தம் ரூ.65.61 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு செய்தது கண்டறியப்பட்டது.

ஆய்வின்போது சில முறைகேடுகளுக்காக வணிகநிறுவனத்திடம் இருந்து ரூ.2.12 கோடி அரசுக்கு வரி வசூலிக்கப்பட்டது.

மேலும், இதர வரி ஏய்ப்பு தொடர்பான மேல்நடவடிக்கை வணிகவரித் துறையினரால் தொடரப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x