Published : 10 Mar 2016 10:02 AM
Last Updated : 10 Mar 2016 10:02 AM

ஐஆர்ஆர்ஜேஎல் நிறுவனத்தை வாங்கியது டாடா பவர்

டாடா பவர் நிறுவனம் காற்றாலை மின்னுற்பத்தி நிறுவனமான ராமா மரபு சாரா நிறுவனத்தை (ஆர்ஆர்எல்) வாங்கியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள காற்றாலை உற்பத்தி நிலையத்திலிருந்து 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த ஆலை தற்போது டாடா பவர் நிறுவனம் வசம் வந்துள்ளது.

2013-ம் ஆண்டிலிருந்து காற்றாலை மின்னுற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் மஹாராஷ்டிர மாநில மின்வாரியத்துக்கு மின்சாரத்தை அளிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த காற்றாலை மின்னுற்பத்தி நிறுவனத்தை வாங்கியதன் மூலம் டாடா பவர் நிறுவனத்தின் மின்னுற்பத்தி திறன் 9130 மெகாவாட்டாக உயர்ந் துள்ளது.

காற்றாலை மூலம் இந்நிறுவனம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு 570 மெகாவாட்டாக அதிகரித் துள்ளது. டாடா பவர் நிறுவனத்துக்கு மஹாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு, கேரளம் ஆகிய 5 மாநிலங்களில் காற்றாலை மின்னுற்பத்தி ஆலைகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x