Last Updated : 17 Nov, 2015 10:15 AM

 

Published : 17 Nov 2015 10:15 AM
Last Updated : 17 Nov 2015 10:15 AM

ரிலையன்ஸ் இன்பிராவில் கனடா ஓய்வூதிய நிதியம் 49 சதவீதம் முதலீடு

ரிலையன்ஸ் இன்பிராஸ்ட்ரெக்சர் நிறுவனத்தில் கனடாவின் ஓய்வூ திய நிதியத்தை நிர்வகிக்கும் அமைப்பு (பிஎஸ்பி) 49 சதவீதம் முதலீடு செய்துள்ளது. இதன்படி ரிலையன்ஸ் இன்பிராஸ்ட்ரெக்சர் நிறுவனத்தின் மின்னுற்பத்தி உள்ளிட்ட தொழிலில் இந்நிறுவன பங்கு 49 சதவீதமாக இருக்கும்

அனில் அம்பானிக்குச் சொந்த மான ரிலையன்ஸ் இன்பிராஸ்ட் ரெக்சர் நிறுவனம் கனடாவின் ஓய்வூதிய நிதியம் மேற்கொள்ளும் முதலீடுகள் மூலம் தனது கடன் சுமையைக் குறைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

ரிலையன்ஸ் இன்பிராஸ்ட் ரெக்சர் நிறுவனம் எவ்வித நிபந்த னையும் இல்லாத ஒப்பந்தத்தை கனடாவின் பொதுத்துறை நிறுவ னமான ஓய்வூதிய முதலீட்டு வாரியத்துக்கு 49 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது. நிறுவ னத்தின் மின்னுற்பத்தி, விநியோ கம் உள்ளிட்ட பணிகளில் இந்த பங்குகள் இருக்கும் என்று ரிலை யன்ஸ் இன்பிரா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இன்பிரா நிறுவ னத்தின் அங்கமான மின்னுற்பத்தி நிறுவனம் மும்பையில் 30 லட்சம் குடியிருப்புகளுக்கு மின்சாரத்தை சப்ளை செய்கிறது. அத்துடன் தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களுக்குத் தேவையான மின்சாரத்தை விநியோகிக்கிறது. இந்நிறுவன செயல்பாடு 400 சதுர கிலோமீட்டர் அளவுக்கு பரந்து விரிந்துள்ளது. இந்நிறுவன உச்சபட்ச மின் விநியோகம் 1,800 மெகாவாட்டாகும். 2014-15-ம் நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் வருமானம் ரூ. 7,700 கோடியாகும்.

இரு நிறுவனங்களிடையிலான உடன்பாடு சில விதிமுறைகள், ஒப்புதலுக்குப் பிறகு செயல் வடிவம் பெறும். இதனால் இந்த கட்டத்திலேயே ஒப்பந்தம் நிறைவேறியதாகக் கருத முடியாது. ஒப்பந்தம் முழுமை பெறும் சமயத்தில் இது தொடர் பான விரிவான அறிவிப்பு வெளி யாகும் என ரிலையன்ஸ் இன்பிரா தெரிவித்துள்ளது. கனடாவின் பிஎஸ்பி முதலீட்டு அமைப்பு ஓய்வூதியத்தை நிர்வகிக்கும் அரசு அமைப்பாகும். இது 11,200 கோடி டாலரை நிர்வகிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x