Published : 14 Oct 2015 10:35 AM
Last Updated : 14 Oct 2015 10:35 AM

இவரைத் தெரியுமா?- எம்.டி. ரங்கநாத்

இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரி. இதற்கு முன்பு நிதி ஆதிகாரியாக பணியாற்றிய ராஜீவ் பன்சால் பதவி விலகியதையடுத்து இந்த பொறுப்புக்கு வந்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவனத் தலைமை அலுவலகத்தின் முதன்மை துணைத் தலைவர், நிதியைக் கையாளும் குழுவின் முதன்மை துணைத் தலைவர், எக்ஸிகியூட்டிவ் கவுன்சில் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

ஜனவரி 2008 முதல் ஜூலை 2013 வரை நிறுவனத்தின் தலைமை ரிஸ்க் அதிகாரியாக பணியாற்றியவர்.கார்ப்பரேட் பைனான்ஸ், கையகப்படுத்துவது மற்றும் இணைப்பு, நிறுவன திட்டம் மற்றும் ரிஸ்க் மேனேஜ்மென்ட் போன்றவற்றுக்கான பொறுப்பாளர்.

தொழில்நுட்பம் மற்றும் ஐடி துறை சார்ந்து 24 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். இன்போசிஸ் நிறுவனத்தில் முக்கிய தலைமைப் பொறுப்புகளில் 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

1991 முதல் 1999 வரை ஐசிஐசிஐ வங்கியில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

மைசூர் பல்கலைக்கழகத்தில் பட்டமும், சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்பம் சார்ந்து உயர்கல்வியும் முடித்துள்ளார். ஐஐஎம் அகமதாபாத் கல்வி நிறுவனத்தில் எம்பிஏ படித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x