Published : 22 Nov 2020 12:09 PM
Last Updated : 22 Nov 2020 12:09 PM
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 3-வது நாளாக இன்று உயர்த்தப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு 8 பைசாவும், டீசல் லி்ட்டருக்கு 19 பைசாவும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
பெட்ரோல் விலை கடந்த செப்டம்பர் 22-ம் தேதிக்குப்பின் மாற்றப்படாமல் இருந்து வந்தது. அதேபோல டீசல் விலை கடந்த அக்டோபர் 2-ம் தேதிக்குப்பின் மாற்றப்படாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.38 பைசாவிலிருந்து ரூ.81.46 பைசாவாகவும், டீசல் லிட்டர் ரூ.70.88 பைசாவிலிருந்து, ரூ.71.07 பைசாவாகவும் அதிகரித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதுவரை பெட்ரோல் லிட்டருக்கு 40 பைசாவும், டீசல் லிட்டருக்கு 61 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றத்துக்கு ஏற்ப இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
கடந்த 58 நாட்களாக பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. டீசலில் 48 நாட்களாக விலை மாற்றம் ஏதும் இல்லை. இதேபோல, மார்ச் 17 முதல் ஜூன் 6-ம் தேதி வரையில் 85 நாட்களும், ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரையிலும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்தது.
மும்பையில் இன்று பெட்ரோல் லிட்டர் ரூ.88.09 பைசாவிலிருந்து, ரூ.88.16 பைசாவாகவும், டீசல் ரூ.77.34 பைசாவிலிருந்து ரூ.77.54 பைசாவாகவும் உயர்ந்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.46 பைசாவிலிருந்து, ரூ.84.53 பைசாவாக அதிகரித்துள்ளது. டீசல் விலை ரூ.76.37 பைசாவிலிருந்து ரூ.76.55 பைசாவாக அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT