Published : 27 Jul 2020 04:31 PM
Last Updated : 27 Jul 2020 04:31 PM
தங்கம் விலை இன்று புதிய உச்சமாக கிராம் 5 ஆயிரம் ரூபாயைக் கடந்தது.
தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.
பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன்றன. இந்தநிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.74 உயர்ந்து ரூ.4978-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.39,824க்கு விற்பனையானது.
பின்னர் மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. அதன்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,013க்கு விற்பனையாகிறது. பவுன் ரூ.40,104க்கு விற்பனையானது.
இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 42,096 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 70.90 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT