Published : 20 Jul 2020 06:52 AM
Last Updated : 20 Jul 2020 06:52 AM
ஜிஎஸ்டி ரீஃபண்ட் பெறுவதில் ஏற்றுமதியாளர்கள் பலர் முறைகேடாக விண்ணப்பத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ரூ.1,875 கோடி மதிப்பிலான கோரிக்கைகளை (கிளெய்ம்களை) அரசு ரத்து செய்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியில் ஐடிசி எனப்படும் உள்ளீட்டு வரி திரும்பப் பெறுதல் வசதி உள்ளது. கரோனா பாதிப்புகாரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த உள்ளீட்டு வரியை வழங்குவதை முன்பை விட அரசு விரைவுபடுத்தி உள்ளது. இதற்கான கிளெய்ம் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ரீஃபண்ட் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த ரீஃபண்ட் கிளெய்ம் செய்வதில் 1,377 ஏற்றுமதியாளர்கள் முறைகேடாக விண்ணப்பித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முகவரியை அடையாளம் காண முடியாததால் இவர்கள் விண்ணப்பித்த ரூ.1,875 கோடி மதிப்பிலான கிளெய்ம்களை அரசு ரத்து செய்துள்ளது.
இந்த ஏற்றுமதியாளர்கள் ஆபத்தான ஏற்றுமதியாளர்கள் என்று மத்திய மறைமுக வரிகள் வாரியம் (சிபிஐசி) கூறியுள்ளது. நேர்மையான ஏற்றுமதியாளர்களுக்கு ஜிஎஸ்டி ரீஃபண்ட் பெறுவதில் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்றும் சிபிஐசி தெளிவுபடுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT