Published : 12 Jun 2020 01:23 PM
Last Updated : 12 Jun 2020 01:23 PM
கரோனா தொற்றை தொடர்ந்து அமலில் உள்ள ஊரடங்கால் பொருளாதார பாதிப்பு கடுமையாக உள்ள நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 40-வது கூட்டம் நடைபெற்று வருகிறது.
கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சர், மத்திய அரசு உயரதிகாரிகள் அனைவரும் காணொலி மூலம் பங்கேற்றுள்ளனர்.
கரோனா வைரஸ் லாக்டவுனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, மாநிலங்களுக்கு ஏற்பட்ட வரி வருவாய் இழப்பு ஆகியவை குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் குழுக்கூட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.
மாநிலங்களுக்கு வரி வருவாய் குறைந்திருப்பதால் வருவாயை அதிகரிப்பதற்கான வழியாக புதிதாக செஸ் விதிப்பது குறித்தும் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. நாட்டில் லாக்டவுன் காரணமாக கடந்த இரு மாதங்களாக பல தொழில்கள், நிறுவனங்கள் முடங்கியதால் நுகர்வு குறைந்துள்ளதால், புதிதாக வரியோ அல்லது வரியை உயர்த்தவோ வாய்ப்பில்லை என தெரிகிறதது.
அதேசமயம் இனிமேல் எந்த திட்டங்களுக்கும் செலவு செய்யப்போவதில்லை என நிதியமைச்சகம் அறிவித்துள்ள நிலையில் வரி வசூல் பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பொருளாதார பாதிப்பால் குறையும் வரி வருவாய் பெரும் அச்சுறுத்தலாகி வரும் நிலையில் ஜிஎஸ்டி வரியை மேலும் குறையாமல் தடுப்பது பற்றியும், தொழில் நிறுவனங்களுக்கு சில சலுகைகளை வழங்கியும், அதேசமயம் வரி வசூலை தொடர்ச்சியாக அதிகரிக்கவும் திட்டமிடப்படலாம் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT