Published : 06 Mar 2020 11:43 AM
Last Updated : 06 Mar 2020 11:43 AM

புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

பிரதிநிதித்துவப் படம்

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.109 உயர்ந்து, ரூ.4,231க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.872 உயர்ந்து, ரூ.33,848-க்கு விற்பனையாகிறது.

கரோனா வைரஸ் பாதிப்பால் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி - இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் சுழற்சியும் தேக்கமடைந்துள்ளது.

இதனால் உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.

இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கிராம் 4 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாகவும், பவுன் 32 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாகவும் உயர்ந்தது. இந்தநிலையில், தங்கத்தின் விலை இன்று (மார்ச் 6) இன்னும் உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.109 உயர்ந்து, உச்சமாக ரூ.4,231க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.872 உயர்ந்து, ரூ.33,848-க்கு விற்பனையாகிறது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தமாகும் நிலையில், தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x