Published : 01 Mar 2020 10:32 AM
Last Updated : 01 Mar 2020 10:32 AM

மூன்றாம் காலாண்டு ஜிடிபி; பொருளாதாரம் நிலைத்தன்மை அடைவதன் அறிகுறி- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து

பொருளாதாரம் நிலைத்தன்மை பெற்றுவருவதன் அறிகுறியாக மூன்றாம் காலாண்டு ஜிடிபி இருப் பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்லமலா சீதாராமன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டுக்கான வளர்ச்சி விகிதம் வெளியானது. அதன்படி, இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 4.7 சதவீதமாக உள்ளது. இது முந்தைய காலாண்டில் இருந்ததைவிட 0.2 சதவீதம் அதிகம். மூன்றாம் காலாண்டில் ஜிடிபிஅதிக வளர்ச்சியை எட்டும்அல்லது குறையும் என்பதாகஎதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்க வில்லை. அந்தவகையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாம்காலாண்டு வளர்ச்சி, பொருளாதாரம் நிலைத்தன்மை பெற்று வருவதற்கான அறிகுறி என அவர் கூறினார்.

இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண் டுள்ளது. மக்களின் நுகர்வுத் திறன் குறைந்துள்ள நிலையில், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் நிலவும் அரசியல் சூழ்நிலையால் இந்தியாவில் முதலீடு செய்ய நிறுவனங்கள் தயங்குகின்றன. இதன்விளைவாக இந்தியப் பொருளாதாரம் தொடர் சரிவில் உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி 5 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 4.5 சதவீதமாகவும் உள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் சரிவு ஆகும்.இந்நிலையில் மூன்றாம் காலண்டில்4.7 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இது சென்ற காலாண்டுடன் ஒப்பிடுகையில் சற்று உயர்வுதான் என்றாலும், சென்ற நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் எட்டிய ஜிடிபியைவிட மிகக் குறைவு ஆகும். 2018-19 நிதி ஆண்டு மூன்றாம் காலாண்டில் ஜிடிபி 6.6 சதவீதமாக இருந்தது.

அதேபோல் நாட்டின் நிதிப் பற்றாக்குறை விகிதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை 3.3 சதவீதத்துக்குள் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. அந்த இலக்கை எட்டமுடியாத நிலையில் தற்போது அதை 3.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அதன்படி, இந்த முழு நிதி ஆண்டுக்குமாக நிதிப் பற்றாக்குறை அளவை ரூ.7.66 லட்சம் கோடிக்குள் வைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால்,கடந்த பத்து மாதங்களுக்கான நிதிப் பற்றாக்குறையே ரூ.9.85 லட்சம் கோடியாக உள்ளது.

கோவிட் 19 வைரஸ் பரவி வருவதால் இந்தியப் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், ‘தற்போதைய சூழலில் கோவிட் 19 வைரஸ்குறித்து அதிகம் அச்சப்படத் தேவையில்லை. மூன்று வாரங்களுக்குள் சரிசெய்யப்படாவிட்டால்தான் இந்தியாவுக்கு சவாலாக மாறும்.வைரஸ் பாதிப்பு தொடர்ந்து நீடித்தால், இந்திய நிறுவனங்களுக்கான விநியோகம் பாதிப்பைச் சந்திக்காத வகையில் தேவையான நடவடிக்கைகளை அரசுமேற்கொள்ளும்’ என்று அவர்கூறினார்.

அதேபோல் சில்லறை வணி கம், வேளாண் என அனைத்து துறைகளுக்கும் தேவையான அளவில் கடன் வழங்க வேண்டும் என்று வங்கிகளை அறிவுறுத்திஉள்ளதாக அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x