Published : 28 Feb 2020 09:57 AM
Last Updated : 28 Feb 2020 09:57 AM

நிறுவனங்களின் மோசடியை தடுக்க புதிய தணிக்கை நடைமுறைகள்: நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சகம் வெளியீடு

நிறுவன மோசடியைத் தடுக்கும் விதமாக புதிய தணிக்கை நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. நிறுவனங்களைத் தணிக்கை செய்யும் தணிக்கையாளர்கள், அந்நிறு வனங்களில் மோசடி நிகழ்வதற்கான சாத்தி யங்கள், கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதி ஆகிய விவரங்களை இனி தணிக்கை அறிக்கையில் பதிவு செய்ய வேண் டும் என்று நிறுவன விவகாரங் களுக்கான அமைச்சகம் தெரி வித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை நிறுவன விவகாரங் களுக்கான அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்டது.

நிறுவனங்களில் மோசடி அதி கரித்து வருகிற நிலையில் இந்த நடைமுறை கொண்டுவரப்படு கிறது. நிறுவன மோசடிகளைக் கட்டுப்படுத்தும்விதமாக நிறுவனங்களைத் தணிக்கை செய்யும் தணிக்கையாளர்கள் அந்நிறுவனங் களின் மோசடி தொடர்பான விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நிறுவன விவ காரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், நிறுவனங் களில் நிகழும் மோசடிகளை ஆரம் பக்கட்டத்திலேயே தடுக்க வேண் டும். அதற்கேற்ப தணிக்கையாளர் கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் மீதான தங்கள் பார்வையை முன் வைக்க வேண்டும். நிறுவனத்தின் நிதி நிலை, கடனைச் செலுத்தும் திறன் ஆகியவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும். அதேபோல், வங்கிகளிடமிருந்து அந்நிறுவனம் பெற்ற கடன் முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா போன்ற விவரங்களை அறிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த உத்தரவு 10 கோடிக்கு கீழ் வருவாய் உள்ள நிறுவனங் கள், வங்கிகள், காப்பீட்டு நிறு வனங்கள், ஒரு நபர் நிறுவனங் கள், லாப நோக்கற்ற நிறுவனங் கள் ஆகியவற்றைத் தவிர்த்து பிற அனைத்து நிறுவனங்களுக் கும் பொருந்தும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. தணிக்கைத் தொடர் பாக 2016-ம் ஆண்டின் நடைமுறை யின்படி தணிக்கையாளர்கள் நிறு வனங்கள் தொடர்பான 21 விவ ரங்களை அளிக்க வேண்டும். தற்போதைய புதிய நடைமுறையில் அது 50-ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x