Published : 19 Feb 2020 05:22 PM
Last Updated : 19 Feb 2020 05:22 PM

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், இன்று புதிய உச்சம் தொட்டுள்ளது.

உலகளாவிய பொருளாதாரச் சூழலால் அமெரிக்கா- சீனா வர்த்தகப் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. இதுபோலவே, ஈரான் - அமெரிக்கா இடையே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாகக் காணப்படும் வர்த்தகச் சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்குப் பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன.

இதுமட்டுமின்றி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாகச் சரிந்து வருகிறது. இதுவும் தங்கம் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகக் கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு பவுனுக்கு (8 கிராம்) 312 ரூபாய் உயர்ந்து ரூ.31,720-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 39 ரூபாய் உயர்ந்து ரூ.3,965க்கு விற்பனையாகிறது.

இதனிடையே 8 கிராம் சுத்தத் தங்கத்தின் விலை மும்பை சந்தையில் 33 ஆயிரத்து 304 ரூபாயாக உயர்ந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் விலை இன்னும் அதிகரிக்கும் என்று தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x