Published : 13 Jan 2020 10:21 AM
Last Updated : 13 Jan 2020 10:21 AM
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரூ.4.7 லட்சம் கோடி அளவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 2017-ம் ஆண்டுக்குப் பிறகே ரூ.2 லட்சம் கோடி அளவில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2015-ம் ஆண்டு ஆந்திர அரசு ரூ.24,000 கோடியும், தெலங்கானா அரசு ரூ.17,000 கோடியும் விவசாயக் கடனில் தள்ளுபடி செய்தன. 2017-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு ரூ.5,280 கோடியை தள்ளுபடி செய்தது. 2018-ல் மகாராஸ்டிரா ரூ.34,020 கோடி, உத்தரப் பிரதேசம் ரூ.36,360 கோடி, பஞ்சாப் ரூ.10,000, கர்நாடகா ரூ.18,000 கோடி அளவில் தள்ளுபடி செய்தன. அதேபோல் 2019-ம் ஆண்டில் ராஜஸ்தான் ரூ.18,000 கோடி, மத்தியப் பிரதேசம் ரூ.36,500 கோடி, சத்தீஸ்கர் ரூ.6,100 கோடி, மகாராஸ்டிரா ரூ.51,000 கோடி வரையிலும் தள்ளுபடி செய்தன.
கடன் அதிகரிப்பு
2015-16 நிதியாண்டில் ஒட்டு மொத்த வாராக் கடன் ரூ.5.6 லட்சம் கோடியாக இருந்ததது. அதில் விவாசயம் சார்ந்த வாராக கடன் ரூ.48,800 கோடியாக இருந் தது. இந்நிலையில் 2018-19 நிதி யாண்டில் ஒட்டுமொத்த வாராக் கடனில் (ரூ.8.8 லட்சம் கோடி) விவசாயத் துறை சார்ந்த வாரக் கடன் 12.4 சதவீதமாக அதிகரித்து ரூ.1.1 லட்சம் கோடியாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT