Published : 27 Dec 2019 06:30 PM
Last Updated : 27 Dec 2019 06:30 PM

மத்திய அரசுக்கு ரூ.2610 கோடி பங்குத்தொகை: எல்ஐசி வழங்கியது

எல்ஐசி நிறுவனம் 2018-19-ம் நிதியாண்டுக்கான உபரித்தொகை யில் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய பங்காக 2610 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.

பொத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி 2018-19-ம் நிதியாண்டில் 53214 கோடி ரூபாய் அளவுக்கு உபரி தொகையை ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிட்டால் 9.9 சதவீத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. சந்தையில் பாலிசிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரையில் 76.28 சதவீத அளவுக்கு பங்களிப்பை கொண்டுள்ளது. அதுபோலவே முதலாண்டு பிரிமீயம் தொகையை பொறுத்தவரையில் 71 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தநிலையில் எல்ஐசி நிறுவனம் 2018-19-ம் நிதியாண்டுக்கான உபரித்தொகை யில் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய பங்காக 2610 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.

இதற்கான காசோலையை எல்ஐசியின் தலைவர் குமார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இன்று வழங்கினார். நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x