Published : 03 Dec 2019 12:12 PM
Last Updated : 03 Dec 2019 12:12 PM

பட்ஜெட்டுக்கு முன்பு மேலும் சீர்த்திருத்தம்: நிர்மலா சீதாராமன் உறுதி

புதுடெல்லி

2020-ம் ஆண்டு பட்ஜெட்டுக்கு முன்பாக மேலும் பல சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து 10 மாதங்களாக விற்பனைக் குறைவு, வேலையின்மை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை நாடு எதிர்கொண்டு வருகிறது. 2-வது காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்தநிலையில், இந்திய – ஸ்வீடன் வர்த்தக மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்றது. ஸ்வீடன் நாட்டில் இருந்து வந்துள்ள வர்த்தக பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:

பொருளாதார நெருக்கடியை தீர்க்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2020-ம் ஆண்டு பட்ஜெட்டுக்கு முன்பாக மேலும் பல சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். கார்ப்பரேட் வரியை ஏற்கெனவே குறைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல சீர்த்திருத்தங்களை எதிர்பார்க்கலாம்.’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x