Published : 14 Nov 2019 09:14 PM
Last Updated : 14 Nov 2019 09:14 PM
ஏர்டெல் தொலைபேசி சேவை நிறுவனத்தைத் தொடர்ந்து ஐடியா-வோடபோன் தொலைபேசி சேவை நிறுவனமும் செப்டம்பர் 30ம் தேதி முடிவடைந்த 2ம் காலாண்டில் ரூ.50.921 கோடி என்று பெருநஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சமீப காலங்களில் எந்த ஒரு இந்திய நிறுவனமும் காலாண்டில் இத்தகைய பெருநஷ்டன் ஈட்டியதாகத் தெரியவில்லை.
வோடபோன் நிறுவனம் அன்று அரசு கைகொடுக்கவில்லை எனில் நிச்சயம் இந்தியாவின் தங்கள் நிறுவனத்தின் எதிர்காலம் கடினமே என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அட்ஜஸ்ட் செய்யப்பட்ட மொத்த வருவாய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த சமீபத்திய உத்தரவுகள் இந்நிறுவனங்களை கடுமையாகப் பாதிப்பதாக இந்த நிறுவனங்கள் அரசின் உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT