Published : 11 Oct 2019 10:00 AM
Last Updated : 11 Oct 2019 10:00 AM
பாரீஸ்
சர்வதேச அளவில் கருப்புப் பணம் மற்றும் தீவிரவாத நிதி உள்ளிட்ட நடவடிக்கைகளில் நாடுகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து பட்டியல் ஒன்றை பாரீஸை சேர்ந்த சர்வதேச நிதி சார் நடவடிக்கை குழு தயார் செய்கிறது. அதில் கடந்த வருடம் ஜூன் மாதம் பாகிஸ்தான் கண்காணிப்பு பட்டி யலில் சேர்க்கப்பட்டது. மேலும், சில விதிமுறைகளையும் பாகிஸ் தானுக்கு அக்குழு வழங்கியது. அவற்றை செயல்படுத்த ஒரு ஆண்டு அவகாசம் அளித்தது.
இந்நிலையில் கடந்த ஓராண்டில் கருப்புப் பண உருவாக்கம் மற்றும் தீவிரவாத நிதி உள்ளிட்ட முறைகேடுகள் நடக்காதவண்ணம் பரிவர்த்தனைகளைக் கண்காணித்து வந்துள்ளதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள் ளது. இதை ஒரு அறிக்கையாகவும் தயார் செய்துள்ளது. இந்த அறிக்கையை வரும் அக்டோபர் 12 முதல் 15-ம் தேதி வரை நடக்கும் கூட்டத்தில் சமர்ப்பிக்க உள்ளது. இந்த அறிக்கையை கருப்புப் பண கட்டுபாட்டு அமைப்பு குழு ஆராய்ந்து பாகிஸ்தான் ‘கண் காணிப்பு பட்டியலில்’ நீடிக்க வேண் டுமா, அல்லது தடை செய்யப் படும் பட்டியலில் சேர்க்கப்படுமா அல்லது தூய்மை பட்டியலுக்கு முன்னேற்றம் அடையுமா என்பதை முடிவு செய்யும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT