Published : 05 Jun 2015 10:24 AM
Last Updated : 05 Jun 2015 10:24 AM

பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் திட்டமிட்டபடி தொடரும்: அருண் ஜேட்லி தகவல்

பங்குச்சந்தையில் ஏற்ற இறக்க சூழ்நிலை இருந்தாலும் திட்டமிட்டப்படி பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் தொடரும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

நடப்பு நிதி ஆண்டில் பங்கு விலக்கல் மூலம் 69,500 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

`பங்குச்சந்தையை பொருத்த வரை தினசரி நிகழ்வுகளை நான் பெரிதாக கவனிப்பதில்லை. இந்திய பொருளாதாரம் மீண்டு வருகிறது. பங்குச்சந்தை நிலைத் தன்மையுடன் இயங்கி வருகி றது. இதனால் ஏற்கெனவே திட்டமிட்டபடி பங்குவிலக்கல் நடைபெரும் என்று நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

பருவமழை குறையும் என்ற கணிப்பினால் பணவீக்கம் அதிகரிக்கும் அல்லது பொருளா தாரத்தில் நிச்சயமற்ற சூழல் உருவாகும் என்று அச்சப்படுவது தேவையற்றது என்று ஜேட்லி தெரிவித்தார்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் பங்குச் சந்தை சரிந்து முடிந்தது. கடந்த மூன்று வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 1035 புள்ளிகள் சரிந்து முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x