Last Updated : 16 Jun, 2015 10:01 AM

 

Published : 16 Jun 2015 10:01 AM
Last Updated : 16 Jun 2015 10:01 AM

பணவீக்கம் மைனஸ் 2.36%

நாட்டின் ஒட்டுமொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் மே மாதத்தில் மைனஸ் 2.36 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் மைனஸ் 2.65 சதவீதமாக இருந்தது. மே மாதத்தில் நிலைமையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விலை அடிப் படையிலான குறியீட்டெண் 2014 மே மாதம் 6.18 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உணவுப் பொருள்களின் விலை 3.8 சதவீதம் உயர்ந் துள்ளது. பருப்பு விலை 22.8 சதவீதமும் உயர்ந்துள்ளது.

பழங்களின் விலை முந்தைய மாதத்தை விட 8.65 சதவீதம் உயர்ந்து விற்பனையானது. பால் விலை 6.85 சதவீதமும், கோதுமை விலை 2.79 சதவீத மும் உயர்ந்துள்ளது. மே மாதத் தில் முட்டை, இறைச்சி, மீன் உள்ளிட்ட புரதம் நிறைந்த உணவுப் பொருள்களின் விலை சற்று குறைந்து காணப்பட்டது.

ஒட்டுமொத்தமாக உணவுப் பணவீக்கம் 3.8 சதவீதமாகும். இது கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். எல்பிஜி விலை 5.18 சதவீதமும், பெட்ரோல் விலை 11.29 சதவீதமும், டீசல் விலை 11.62 சதவீதமும் குறைந்துள்ளது.

உற்பத்தித்துறை பொருள் களின் விலை மைனஸ் 0.64 சதவீதம் குறைந்தது. இதேபோல முதன்மைப் பொருள்களின் விலை மைனஸ் 0.77 சதவீதம் குறைந்திருந்தது. தொடர்ந்து 7 மாதங்களாக கடும் சரிவைச் சந்தித்து வந்த பணவீக்க நிலையில் மே மாதத்தில் லேசான முன்னேற்றம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு நவம்பரிலிருந்து பணவீக்கம் மைனஸ் நிலை யிலேயே தொடர்கிறது.

இந்த ஆண்டு பருவமழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தபோதிலும் அது பணவீக்கத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. ஒட்டு மொத்த விலைக் குறியீட்டெண் ணில் முன்னேற்றம் ஏற்பட் டதால் சில்லரை விலை அடிப் படையிலான பணவீக்கத்திலும் முன்னேற்றம் ஏற்படும் என்று தெரிகிறது. மத்திய புள்ளியியல் அலுவலகம் கணிக்கும் நுகர் வோர் விலை குறியீட்டெண் மே மாதத்தில் 5.01 சதவீதமாக இருந்தது. இது மே மாதத்தில் 4.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொழில்துறையினர் கருத்து

தொழில்துறையை ஊக்கு விக்க கடன் மீதான வட்டிக் குறைப்பை ரிசர்வ் வங்கி எடுக்க வேண்டும் என்று தொழில்துறையினர் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

ரிசர்வ் வங்கி வரையறுத் துள்ள அளவிலேயே பொருள் களின் விலை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் வட்டிக் குறைப்பு உற்பத்தித் துறை அதிகரிப்பை ஊக்குவிப்பதாக இருக்கும் என்று இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) வெளியிட்ட அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x