Published : 01 Jun 2015 10:01 AM
Last Updated : 01 Jun 2015 10:01 AM
மூன்று பக்க வருமான வரி தாக்கல் படிவத்தை நிதி அமைச்சகம் கொண்டு வந்திருக்கிறது. இதில் வெளிநாட்டு பயணம், செயல்படாத வங்கி கணக்குகள் உள்ளிட்ட கேள்விகள் இதில் இல்லை. மேலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய இறுதி நாளையும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நிதி அமைச்சகம் நீட்டிப்பு செய்திருக்கிறது.
புதிய ஐடிஆர் 2 மற்றும் ஐடிஆர் 2 ஏ ஆகிய படிவங்கள் மூன்று பக்கங்கள் மட்டுமே கொண்டவை ஆகும். மூலதன ஆதாயம், பிஸினஸ் மூலம் வருமானம், வெளிநாட்டு சொத்து/வருமானம் ஆகியவை இல்லாத தனிநபர் அல்லது இந்து கூட்டு குடும்பம் ஐ.டி.ஆர் 2 ஏ படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
வெளிநாட்டு பயணம் பற்றிய தகவல் கொடுக்கப்பட தேவை இல்லை என்றாலும் அதற்கு பதிலாக பாஸ்போர்ட் எண்ணை கொடுக்க வேண்டும். அதேபோல கடந்த மூன்று வருடங்களாக செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகள் பற்றிய தகவல்களையும் தெரிவிக்க தேவை இல்லை என்று நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
வங்கி கணக்கு பற்றிய தகவலில், வங்கி சேமிப்பு/நடப்பு கணக்கு எண் ஐஎப்எஸ் குறியீடு ஆகியவை கொடுக்கப்பட வேண்டும்.
இந்தியர் அல்லாத ஒருவர், இந்தியாவில் தொழில் அல்லது பணியில் இருக்கும் ஒருவர் வருமான வரி தாக்கல் செய்யும் போது முந்தைய ஆண்டுகளில் வெளிநாடுகளில் வாங்கியிருந்த சொத்துகளில் வருமானம் ஏதும் இல்லாதபட்சத்தில் அந்த சொத்துகள் பற்றி தகவல் தெரிவிக்க தேவை இல்லை.
ஜூன் மாதம் 3-வது வாரத்தில் ஆன்லைன் மூலம் வருமானம் வரித்தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT