Last Updated : 04 May, 2015 10:57 AM

 

Published : 04 May 2015 10:57 AM
Last Updated : 04 May 2015 10:57 AM

கடந்த நிதியாண்டில் வரிவருவாய் 6.96 லட்சம் கோடி ரூபாய்

கடந்த நிதி ஆண்டில் (2014-15) ரூ.6.96 லட்சம் கோடி நேரடி வரி வருவாய் மூலம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு நிர்ணயம் செய்த இலக்கை விட 14 சதவீதம் இந்த தொகை குறைவாகும். வருமான வரி, கார்ப்பரேட் வரி உள்ளிட்ட பல வகையான நேரடி வரி வருவாய் பிரிவில் 6.96 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டிருக்கிறது.

2014-15-ம் நிதி ஆண்டுக்கு 7.36 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரி வசூல் செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் பொருளாதார சூழல் காரணமாக 7.05 லட்சம் கோடியாக இலக்கு மாற்றப்பட்டது. ஆனால் அதை விட 14 சதவீதம் குறைந்தே வரி வருமானம் கிடைத்திருக்கிறது.

ஆனால் அதே சமயத்தில் இதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் (2013-14) ஒப்பிடும் போது 19 சதவீதம் அதிகம் வசூல் ஆகி இருக்கிறது. 2013-14-ம் நிதி ஆண்டில் நேரடி வரி வருவாய் மூலம் மத்திய அரசுக்கு ரூ.5.83 லட்சம் கோடி கிடைத்தது.

சேவைத் துறை மற்றும் டிடீஎஸ் பிரிவில் வளர்ச்சி இல்லாததால் நேரடி வரி வருவாய் குறைந்ததாக அதி காரிகள் தெரிவித்தார்கள்.

2014-ம் நிதி ஆண்டில் 18 சதவீத வளர்ச்சி இருந்த டிடீஎஸ் பிரிவில் 2015-ம் நிதி ஆண்டில் 8 சதவீத வளர்ச்சி மட்டுமே இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x