Last Updated : 08 Apr, 2015 10:32 AM

 

Published : 08 Apr 2015 10:32 AM
Last Updated : 08 Apr 2015 10:32 AM

ஆர்இசி பங்குகள் இன்று விற்பனை: விலை ரூ. 315

பொதுத்துறை நிறுவனமான கிராமப்புற மின்மயமாக்கும் நிறுவனத்தின் (ஆர்இசி) 5 சதவீத பங்குகள் இன்று விற்பனை செய்யப்பட உள்ளன. பங்குகளின் விலை ரூ. 315 ஆக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்தப் பங்கு விற்பனை மூலம் ரூ. 1,550 கோடி திரட்ட அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிறுவனப் பங்கு விலை ரூ.321.65 ஆக விற்பனை யானது. இதிலிருந்து 2.07 சதவீதம் தள்ளுபடி போக ரூ. 315 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஓஎப்எஸ் முறையில் 4.93 கோடி பங்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பங்குகளின் விலை ரூ. 315 மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடந்த கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவன பங்கு விற்பனை வர்த்தக சமயத்தில் காலை 9.15 முதல் பிற்பகல் 3.30 வரை விற்பனை செய்யப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x