Published : 07 Apr 2015 10:38 AM
Last Updated : 07 Apr 2015 10:38 AM

சென்செக்ஸ் 244 புள்ளிகள் உயர்வு

தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகான வர்த்தக நாளில் நேற்று பங்குச் சந்தை சென்சென்ஸ் 1 சதவீதம் வரை ஏற்றம் கண்டது. மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகக் குறியீடான சென்செக்ஸ் 244 புள்ளிகள் ஏற்றம் கண்டு 28504 புள்ளிகள் முடிந்துள்ளது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 73 புள்ளிகள் ஏற்றம் கண்டு 8659 புள்ளிகளில் நிலை கொண்டுள்ளது.

ரிசர்வ் வங்கி இன்று நிதிக் கொள்கை அறிவிக்க உள்ள நிலையில் சந்தை ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிஆர்ஆர் வட்டி விகிதங்களில் எந்த மாற்றங்களும் எதிர்பார்க்க முடியாது என ரகுராம் ராஜன் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இந்த நிலையில் எஸ்எல்ஆர் வட்டி விகிதங்களில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என சந்தை நிபுணர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நேற்றைய வர்த்தகத்தில் ஹெல்த்கேர், எப்எம்சிஜி பங்குகள் ஏற்றம் கண்டன. முக்கியமாக பார்மா பங்குகள் முதலீட்டாளர்களின் தேர்வாக இருந்தது. சன் பார்மா பங்குகள் 8.15 சதவீதம் ஏற்றம் கண்டது. டாக்டர் ரெட்டீஸ் 4.08%, கெயில் 3.92% கெய்ர்ன் 3.68%, சிப்லா 3.67% ஏற்றத்தைச் சந்தித்தன.

பஞ்சாப் நேஷனல் வங்கி, விப்ரோ, டாடா ஸ்டீல், ரிலை யன்ஸ், இண்டஸ்இந்த வங்கி பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் இறக்கத்தைக் கண்டன.

ஆட்லாப்ஸ் என்டர்டெயிண் மெண்ட் பங்குகள் நேற்றுமுதல் பட்டியலிடப்பட்டது. தேசிய பங்குச் சந்தையில் இதன் பங்கு கள் 7 சதவீதம் வரை ஏற்றத்தைக் கண்டன.

சன் டிவி பங்கு சரிவு

நேற்றைய வர்த்தகத்தில் சன் டிவி நெர்வொர்க் பங்குகள் 9 சதவீதம் வரை சரிந்து ரூ.411 என்ற விலையில் வர்த்தகமானது. நேற்று மட்டும் ரூ.45 வரை இழப்பை இந்த பங்குகள் சந்தித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x