Published : 30 Mar 2015 10:00 AM
Last Updated : 30 Mar 2015 10:00 AM
செபியின் காலக்கெடு முடிவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே மீதம் இருக்கும் சூழ்நிலையில் பட்டியலிடப்பட்ட 400 நிறுவனங்களில் ஒரு பெண் இயக்குநர்கள் கூட நியமிக்கப்பட வில்லை. சில நிறுவனங்கள் அடுத்த இரண்டு நாட்களில் இயக்குநர் குழு கூட்டங்களை வைத்திருக்கின்றன.
கடந்த வாரத்தில் ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, டாடா இன்டர்நேஷனல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பெண் இயக்குநர்களை நியமனம் செய்தன. இருந்தாலும் மார்ச் 25-ம் தேதி நிலவரப்படி 395 நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் பெண்கள் இல்லை.
செபியின் விதிமுறைகளின் படி பட்டியலிடப்பட்ட நிறுவனங் களின் இயக்குநர் குழுவில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநராவது இருக்க வேண்டும். இதற்கான காலக் கெடு கடந்த அக்டோபர் 1 முடிவடைந்தது. அதன் பிறகு ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது.
பெண் இயக்குநர்களை நியமிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு செபி எச்சரிக்கை செய்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT