Published : 10 Mar 2015 09:41 AM
Last Updated : 10 Mar 2015 09:41 AM
$ டபுள்யூஎன்எஸ் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. நாஸ்காம் நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார்.
$ சென்னையில் பிறந்தவர். ரஞ்சி டிராபி கிரிக்கெட் வீரர் எம்.கே.முருகேஷ் இவரது தந்தை.
$ வணிகவியலில் இளநிலை பட்டமும், இந்திய பட்டயக் கணக்காளர் பட்டமும் பெற்றவர்.
$ 1989 ல் ஐடிசி நிறுவனத்தின் உள் தணிக்கையாளராக பணியைத் தொடங்கினார். ஐடிசி நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர். ஐடிசி நிறுவனத்தின் நிதிப்பிரிவு துணைத் தலைவராக இருந்தவர்.
$ 2002ல் சின்டெல் இன்கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகச் சேர்ந்தார். 2004 தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றினார். 2009ல் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.
$ இந்திய தணிக்கையாளர் நிறுவனம் வழங்கும் `பிசினஸ் லீடர் 2013’ விருது, ஆசியாவின் சிறந்த சிஎஸ்ஆர் நடவடிக்கைகளுக்கான சமூக தொழில்முனைவோர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். சிறந்த பேச்சாளர். சர்வதேச அளவில் பல கருத்தரங்குகளில் பங்கேற்பவர்.
$ நீங்கள் இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ நினைத்த இலக்கை அடையலாம். ஆனால் கடந்த காலத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டும். சர்வதேச அளவில் வளர்வது என்பது வெற்றியல்ல, அது நமது அறிவு வளர்ச்சியின் அடையாளம் என்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT