Published : 12 Feb 2015 10:55 AM
Last Updated : 12 Feb 2015 10:55 AM
பெங்களூருவை மையமாகக் கொண்ட ஏஞ்செல் பிரைம் முதலீட்டு நிறுவனம் சென்னையில் இயங்கும் நிம்பிள் வயர்லெஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளது. இது தொடர்பாக இரண்டு நிறுவனமும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தன.
நிம்பிள் வயர்லெஸ் நிறுவனம் நவீன தொழில்நுட்பத்திலான சென்சார்களை வாடிக்கையாளர் களுக்கு அமைத்துத் தருகிறது. மொபைல் மற்றும் இணையதளம் வழியாக கண்காணிக்கக் கூடிய சென்சார் அமைப்புகளை வாடிக் கையாளர்களுக்கு அமைத்து தருகிறது. மேலும் அது தொடர்பான மென்பொருட் களையும் அளிக்கிறது.
இந்த நிறுவனம் அமெரிக்காவில் தனது தொழில்களை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்தியாவில் தனது தொழிலை மேற்கொண்டு வரும் இந்த நிறுவனம், தனது தொழில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த நிறுவனத்தில் ஏஞ்செல்பிரைம் முதலீடு செய்கிறது.
இது குறித்து பேசிய நிம்பிள் வயர்லெஸ் இணை நிறுவனரும் இந்த நிறுவனத் தின் தலைமை செயல் அதிகாரியுமான சிவ சிவக்குமார் இந்த முதலீட்டைக் கொண்டு அடுத்த கட்ட தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்று குறிப்பிட்டார்.
மேலும் எங்களது துறை சார்ந்து முதன்மையான நிறுவனமாக வளர இலக்கு வைத்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT