Published : 13 Feb 2015 11:10 AM
Last Updated : 13 Feb 2015 11:10 AM

நுகர்வோர் பணவீக்கம் 5.11 சதவீதமாக அதிகரிப்பு

ஜனவரி மாத நுகர்வோர் பணவீக்கம் 5.11 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.கடந்த வருடம் இதே காலத்தில் பணவீக்கம் 4.9 சதவீதமாக இருந்தது. 2011-12-ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு வெளியாகும் முதல் பணவீக்க குறியீடு இதுதான்.

பணவீக்கம் அதிகரித் திருப்பதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி விகிதத்தை குறைப்பதற்கு இன்னும் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்ற அச்சம் தொழில் துறையினர் மத்தியில் வந்திருக்கிறது. பல மாதங்களுக்குப் பிறகு பிறகு கடந்த 15-ம் தேதி ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் வட்டியைக் குறைத்தது.

இந்த காலகட்டத்தில் பண வீக்கத்துக்கு 8 சதவீத இலக்கினை ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்தது. இந்த இலக்கை விட குறைவாக இருந்தாலும் அடுத்தடுத்த மாதங் களில் இருக்கும் பணவீக்க எண்களை பொறுத்துதான் ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஐபி உயர்வு

தொழில் உற்பத்தி குறியீடு (ஐஐபி) உயர்ந்திருக்கிறது. டிசம்பர் மாத ஐஐபி 1.7 சதவீதமாக இருக்கிறது. இதற்கு முந்தைய நவம்பர் மாதத்தில் தொழில் உற்பத்தி குறியீடு 3.9 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஐஐபி குறியீடு 2.1 சதவீதமாக இருக்கிறது.

உற்பத்தித்துறை 2.1 சதவீத வளர்ச்சியும், மின் துறை 4.8 சதவீத வளர்ச்சியையும் அடைந்திருக்கிறது. கன்ஸ்யூமர் டியூரபிள் துறையை தவிர மற்ற அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்திருக்கின்றன.

8700-க்கு மேலே நிப்டி

இந்திய பங்குச்சந்தைகள் நேற்று உயர்ந்தது. நிப்டி மீண்டும் 8700 புள்ளிகளுக்கு மேலே மீண்டும் உயர்ந்தது. சென்செக்ஸ் 271 புள்ளிகள் உயர்ந்து 28805 புள்ளியிலும் நிப்டி 84 புள்ளிகள் உயர்ந்து 8711 புள்ளியிலும் முடிவடைந்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் 1 சதவீதம் அளவுக்கு உயர்ந்து முடிவடைந்தன.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. பங்குச் சந்தைகள் உயர இதுவும் ஒரு காரணமாகும்.

மேலும் டெல்லி மாநில தேர்தலில் தோல்வி எங்களது சீர்திருத்தங்களை பாதிக்காது என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருப்பதால் நிப்டி 9000 புள்ளிகளை நெருங்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x