Last Updated : 16 Jan, 2015 12:08 PM

 

Published : 16 Jan 2015 12:08 PM
Last Updated : 16 Jan 2015 12:08 PM

நிறுவனங்களின் நிதி திரட்டல் அதிகரிப்பு

இந்திய நிறுவனங்களின் நிதி திரட்டல் 2014 ஆம் ஆண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது. நிறுவனங்களின் கடன் பத்திர வெளியீட்டின் மூலம் ரூ.3.43 லட்சம் கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களின் பங்களிப்பு 50க்கு குறைவாக இருந்த நிலையிலும் கடன் விற்பனை நடந்துள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்கள் குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக முதலீட்டாளர்களின் நம்பிக்கை இருந்தது. இது சாத்தியமாகி இருந்தால் கடன் அதிகரிப்பதற்கான தூண்டுதலாக இருந்திருக்கும்.

செபி கடைசியாக அறிவித்துள்ள சந்தை புள்ளி விவரங்கள்படி தனியார் வாய்ப்புகள் மற்றும் நிறுவன கடன் பத்திரங்கள் மூலம் திரட்டிய ரூ.3.43 கோடி அதற்கு முந்தைய ஆண்டைவிட அதிமானது என்று குறிப்பிட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் நிறுவனங்கள் திரட்டிய தொகை ரூ.2.58 லட்சம் கோடியாகும்.

பல நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்ட வழி இருந்தது. இருப்பினும் சில நிறுவனங்கள் மட்டுமே பொதுப் பங்கு வெளியீட்டுக்கு வந்தன என்று குறிப்பிட்டுள்ளார் சிஎன்ஐ ஆராய்ச்சி பிரிவின் தலைவர் கிஷோர் ஆஸ்வால்.

தொழில் விரிவாக்கம் மற்றும் நடைமுறை மூலதன தேவைகளின் காரணமாகவே நிதி திரட்டல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x