Published : 28 Jan 2015 11:42 AM
Last Updated : 28 Jan 2015 11:42 AM

இவரைத் தெரியுமா? - நீரஜ் காகர்

ஹெக்டர் பெவரேஜஸ் (பேப்பர் போட் உள்ளிட்ட குளிர்பானங்களை விற்பனை செய்யும் நிறுவனம்) நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் மற்றும் அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.

பானிபட்டில் பள்ளிக் கல்வியும், ஹரியாணாவில் இருக்கும் எம்.டி.ஐ. கல்லூரியில் எம்பிஏ-வும் படித்துள்ளார்.

விப்ரோவில் சிறிது காலம் பணிபுரிந்தார். அதன் பிறகு ராஜ் ஷி ஏற்றுமதி நிறுவனத்தை தொடங்கினார். 2001-ம் ஆண்டு முதல் ஏழு வருடங்கள் கோகோ கோலா நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

ஏற்கெனவே எம்பிஏ முடித்திருந்தாலும் சர்வதேச அனுபவத்துக்காக பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் நிர்வாக கல்லூரியில் இரண்டாவது முறையாக எம்பிஏ படித்தார்.

இங்கு முதல் 5 மாணவர்களுக்குள் தேர்ச்சி பெற்றார். மெக்கென்ஸி உள்ளிட்ட சில நிறுவனங்கள் இவருக்கு வேலை கொடுக்க தயாராக இருந்தாலும் தொழில் தொடங்குவதற்காக இந்தியா வந்தார். நண்பர்களுடன் சேர்ந்து ஹெக்டார் பெவரேஜஸ் நிறுவனத்தை தொடங்கினார்.

சில காலம் வேலை செய்த பிறகு எம்பிஏ படிக்கும் போது கிடைக்கும் அனுபவம் அதிகம். இதில் இரண்டாவது யோசனையே தேவை இல்லை என்று குறிப்பிடுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x