Last Updated : 20 Dec, 2014 11:26 AM

 

Published : 20 Dec 2014 11:26 AM
Last Updated : 20 Dec 2014 11:26 AM

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.75%

நடப்பு நிதி ஆண்டில் (2014-15) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.75 சதவீதம் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த நிதி ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட அதே வட்டி விகிதம் இப்போதும் தொடர்கிறது.

5 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி இருக்கிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையிலான குழு இந்த முடிவினை எடுத்தது. நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அனுமதி கிடைத்த பிறகு அரசிதழில் வெளியிடப்படும்.

2001-ம் ஆண்டில் வருங்கால வைப்பு நிதிக்கு 12 சதவீத வட்டி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பி.எப். நிதியத்திடம் 6 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. இதில் இருக்கும் தொகையில் 15 சதவீதம் வரை பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்று நிதி அமைச்சகம் பரிந்துரை செய்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x